இறால் பிடிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!
Saturday, March 11th, 2017கிளிநொச்சி சுண்டிக்குளம் கடல் பகுதியில் இளைஞரின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்ணகிநகரை சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் காலை இறால் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை என தெரிவித்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டது, இதன்போதே குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு உடனடி தகவல் வழங்கப்பட்டது.
குறித்த சடலத்தினை கிளிநொச்சி நீதவான் பார்வையிட்டதன் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்
கள்ளச்சந்தை டொலரை பயன்படுத்தி அரசாங்கம் ஆயுதக்கொள்வனவில் ஈடுபடவில்லை - வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!
யாழ் மாவட்டத்தில் 25 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் - யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் அதிர...
|
|
மாலைத்தீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - புவ...
சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் - திருகோணமலை மாவட்...
கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள்...