இரணைதீவிலிருந்து நோயாளர் படகுச் சேவையை ஏற்படுத்துங்கள் – மக்கள் கோரிக்கை!

Saturday, June 30th, 2018

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவுப் பகுதி மக்களின் மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றை ஏற்படுத்துமாறு கோரியுள்ளனர்.

பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட இரணைதீவுப் பகுதியில் மக்கள் மீள்குடியேறியதையடுத்து குறித்த பிரதேசத்தின் மருத்துவத் தேவை நிவர்த்தி செய்யப்படுவதில் காலதாமதங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவித்த இரணைதீவு மக்கள் இரணைதீவிலிருந்து நோயாளிகளைக் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூர்விகமாக வாழ்ந்த குறித்த தீவில் வெளியேற்றப்பட்டு சுமார் 28 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் குடியமர அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாவிட்டாலும் மருத்துவ வசதி என்பது ஒன்றாகக் காணப்படுவதால் இந்த மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: