இணையத்தளத்தை முடக்கிய மற்றொருவரும் கைது!
Tuesday, August 30th, 2016
ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கிய குற்றச்சாட்டில் மொரட்டுவையைச் சேர்ந்த 27 வயது மற்றுமொரு நபரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அத்துமீறி நுழைந்தமைக்காக கடுகண்ணாவையைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.president.gov.lk எனும் இணையத்தளத்தை முடக்கி அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்பில் அவதூறான செய்திகளை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இணைய குற்றங்கள் பிரிவுக்கு பொறுப்பான ஒரு விசேட குழு இவர்களைக் கைதுசெய்துள்ளது.
Related posts:
சட்ட வரைபில் உள்ள குழப்பங்களை நீக்கிகப்பட்டு விரைவில் மாகாண சபைத் தேர்தலை -துறைசார் தரப்பினருக்கு ஜன...
புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கீகரிக்கவில்லை - அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!
வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் அதி கூடிய வெப்பநிலை பதிவு - நிலைமையை உணர்ந்து நீர்ப் பயன்பாட்டை மேற்...
|
|
|


