ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது!
Tuesday, August 15th, 2017ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கோக்குவில் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் தருசன் (வயது 21) என்ற இளைஞரே இன்று செவ்வாய்க்கிழமை காலை (15.08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இளைஞரின் முகநூலில் ஆவா குழுவிவைச் சேர்ந்த நபர்களுடன் எடுக்கப்பட்ட குறூப் புகைப்படம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆந்த புகைப்படத்தினை ஆதாரமாக வைத்தே இளைஞரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞரை நேற்றையதினம் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கு புதிய சம்பளத் திட்டம்!
அடுத்த இரு வாரங்களுக்குள் ஆறு இலட்சம் ஸ்பூட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் - ஆரம்ப சுகாதா...
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விசாரணை நிறைவடையவில்லை - சட்டமா அதிபர் திணைக்...
|
|