ஆங்கிலமொழி உயர்தர கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம்!
Friday, November 10th, 2017
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தால் உயர் தொழில்துறை தொடர்பாடலுக்கான ஆங்கில மொழி உயர்தரச் சான்றிதழ் கற்கைநெறி 2017/2018 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தக் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயதை பூர்த்தி செய்திருப்பதுடன் க.பொ.த சாதாரணதரத்தில் ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
இந்தக் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கவிருக்கும் விண்ணப்பதாரிகள் www.ou.ac.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், யாழ்ப்பாணப் பிராந்திய நிலையத்தில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் யாழ்ப்பாணப் பிராந்திய நிலைய உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Related posts:
500 கோடி பெறுமதியான வைரக்கல்லுடன் ஒருவர் கைது!
நீண்டகால தீர்வுகளை காண்பதற்கான துரிதமான நடவடிக்கைகளில் இலங்கை தலைவர்கள் ஈடுபடவேண்டும் – அமெரிக்கா வல...
வாக்களித்தவுடன் உடனடியாக வீடுகளுக்கு செல்லுங்கள் - மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!
|
|
|


