அரசஊழியர்களுக்கான தடுப்பூசிக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது – அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

அரசாங்க ஊழியர்களிற்கு கொரோனாவைரஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளதாக அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
கொவிட் பெருந்தொற்றின் போது அரச சேவையின் முக்கியத்துவம் அதிகளவு உணரப்பட்டது என தெரிவித்துள்ள அமைச்சர் கொவிட் அச்சுறுத்தல் காணப்படுகின்ற போதிலும் அரசாங்க ஊழியர்கள் தங்கள் சேவைகளை தொடர்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் முன்கூட்டியே சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுத்தோம்,அவர்கள் குறித்து நாங்கள் கொண்டுள்ள கரிசனையே இதற்கு காரணம் எனவும் அமைச்சர் தெரிவி;த்துள்ளார்.
Related posts:
இலங்கைக்கு வருகைதவுள்ள யுனெஸ்கோ பணிப்பாளர்!
நுகர்வோர் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்!
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை – இன்புளுவென்சா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக விசேட வைத்திய நி...
|
|