அனுமதி இன்றி கடலட்டை பிடித்தவர்கள் கைது!

Sunday, October 16th, 2016

கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் அனுமதியின்றி, பருத்தித்துறைக்கு வடக்கே 8 கடல் மைல் தொலைவில் கடலட்டை பிடித்த ஒன்பது வெளிமாவட்ட மீனவர்களை சனிக்கிழமை (15) காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை, கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் கடலில் நின்ற படகுகளை சோதனை செய்தனர். இதன் போது அனுமதிபத்திரமின்றி கடலட்டை பிடித்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைதான 9 பேரும் வெளிமாவட்ட மீனவர்கள் என்றும், அவர்கள் முல்லைத்தீவு பகுதியில் தங்கி நின்று மீன்பிடிப்பவர்கள் என்று தெரிவித்தார்.அத்துடன் சான்று பொருட்கள், கடலட்டை பிடிப்பதற்கு பயன்படுத்திய பொருட்கள் என்பவற்றை மீட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கைதான அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

DSC03565 (1)

Related posts: