அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

Wednesday, July 25th, 2018

தீவகக்கல்வி வலயத்தில் அமைந்துள்ள வகை – 11, வகை – 111 பாடசாலைகளுக் இடையிலான அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வகை – 11 யைச் சேர்ந்த பாடசாலைகளான யாழ்ப்பாணம் புங்குடுதீவு ஸ்ரீகணேசா வித்தியாலயம், யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் சைவ வித்தியாலயம், யாழ்ப்பாணம் எழுவைதீவு முருகவேள் வித்தியாலயம், யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறைப் புனித மரியாள் றோ.க. வித்தியாலயம், யாழ்ப்பாணம் நாரந்தனை றோ.க.வித்தியாலயம் ஆகியவற்றுக்கும்

வகை -11 இனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.வித்தியாலயம், யாழ்ப்பாணம் அனலைதீவு தெற்கு அ.த.க. பாடசாலை, யாழ்ப்பாணம் மெலிஞ்சிமுனை றோ.க.வித்தியாலயம், யாழ்ப்பாணம் பாலாவோடை இ.த.க.பாடசாலை, யாழ்ப்பாணம் புங்குடுதீவு றோ.க.வித்தியாலயம் ஆகியவற்றுக்கும் விண்ணப்பங்களட கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பப்படிவங்களை தீவகக் கல்வி வலய நிர்வாகப் பிரிவில் பெற்று முழுமை செய்து எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளர், வலயக்கல்வி அலுவலகம், தீவகம், வேலணை எனும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்குமாறு தீவக கல்விப் பணிப்பாளர் இளங்கோ தெரிவித்தார்.

Related posts: