“அண்ணா களஞ்சியசாலை வெடித்து கொண்டிருக்கின்றது” மரணித்த வீரரின் இறுதி வார்த்தை!

Tuesday, June 7th, 2016

அவிசாவளை கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் நேற்று முன்தினம்  ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்த இராணுவ வீரர் இறுதியாக தனது அண்ணா மற்றும் மனைவிக்கு  தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு உரையாடியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த உயிரிழந்த இராணுவ வீரரின் அண்ணா, ‘ நேற்று முன்தினம் மாலை 6.29 மணியளவில் தனது தம்பியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, அப்போது தம்பி என்னிடம் அண்ணா இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியத்தில் தீ பற்றி வெடித்துக் கொண்டிருக்கின்றது.

நான் தற்போது காணில் பதுங்கியுள்ளேன்.  நான் முடிந்தளவு கவனமாக இரு தம்பி அங்கு நிலமை வழமைக்கு திரும்பியதும் எனக்கு அழைப்பு எடு என்று கூறினேன். பிறகு கொழும்பிலிருந்து உறவினர் ஒருவர் அழைப்பு மேற்கொண்ட போது தம்பியின் தொலைபேசி இயங்கவில்லை என்றார்.

மனைவிக்கு வந்த அழைப்பில்

  • ஹலோ நதி உனக்கு கேட்குதா அந்த சத்தம்?
  • எனக்கு எதுவும் கேட்கவில்லை. நீங்கள் கதைப்பது விளங்கவில்லை. கொஞ்சம் சத்தமாக பேசுங்கள். ஏன் அங்கு மழை பெய்கின்றதா?
  • இல்லை இங்குள்ள ஆயுத களஞ்சியசாலை தீப்பற்றி எரிக்கின்றது.
  • ஐயோ, நீங்கள் கவனமாக இருங்கள்.
  • நான் மட்டும் பாதுகாப்பா இருந்தா எப்படி? என்னுடைய நண்பர்கள் எல்லாம் உள்ளே சிக்கிகொண்டுள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்துள்ளது என பார்க்க வேண்டும். பிறகு அழைப்பை மேற்கொள்கிறேன்.

இராணுவ முகாமில் ஏற்பட்ட விபத்தில் புத்தல வகுருவெல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இரு குழந்தைகளின் தந்தையான கே.ஏ. ஜனக சமிந்த என்ற இராணுவ வீரர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

(நன்றி வீரகேசரி)

Related posts: