அடைக்கலம் வழங்கிய இலங்கையர் நாடு கடத்தப்படும் அபாயம்!
Tuesday, December 20th, 2016விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவுனர் எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர் என சீன ஊடகம் ஒன்று தெரிவித்தள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த ஊடகம் வெளியிட்ட தகவல் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஸ்னோவ்டனுக்கு இலங்கையைச் சேர்ந்த சுபுன் திலின கெலபாத்த மற்றும் அவரது மனைவி நதீகா தில்ருக்ஸி நோனீஸ் ஆகியோர் ஹொங்கொங்கில் அடைக்கலம் வழங்கியிருந்தனர். அந்த இலங்கைப் புகலிட கோரிக்கையாளர் உரிய நேரத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளனர். இதனால் சிறையில் தடுத்து வைத்து நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றார். சட்டத்தரணி உரிய நேரத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை அந்தச் சட்டத்தரணி ஸ்னோவ்டனுக்கு உதவிகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|