வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனை!

Thursday, May 13th, 2021

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை வடபிராந்திய போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர் குணபாலச்செல்வம் மற்றும் போக்குவரத்து சபையின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் வட மகாணத்தில் இருக்கக்கூடிய வெற்றிடங்களை நிரப்புதல், வடபிராந்திய தொழிற்சங்கத்தை பதிவு செய்தல், வடபிராந்திய போக்குவரத்து மேன்முறையீட்டு நீதி மன்றத்தை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும், கடந்த மார்ச் 21 திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி – யாழ் வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்  போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அவர்களினால் வட பகுதிக்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்ட வேலைகளை முன்னகர்த்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கொழும்பு ஶ்ரீ கதிரேசன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகள்!
சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி எதிர்காலத்தை வெற்றி கொள்ளுங்கள் - ஒலுமடுவில் டக்ளஸ் எம்பி தெரிவிப்...
எமது பாதை சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருப்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்டளஸ் தேவானந்தா...

நீடித்த மகிழ்ச்சிக்காக நிரந்தர ஒளியேற்ற புது நிமிர்வுடன் உழைப்போம் : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அ...
இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் – அமைச்சர் டக்ள...
இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலை தொடர்பில் அமைச்சரவையில் எடுத்துரைப்பேன் - அமைச்சர் டக்ளஸ் தேவான...