வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனை!

Thursday, May 13th, 2021

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை வடபிராந்திய போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர் குணபாலச்செல்வம் மற்றும் போக்குவரத்து சபையின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் வட மகாணத்தில் இருக்கக்கூடிய வெற்றிடங்களை நிரப்புதல், வடபிராந்திய தொழிற்சங்கத்தை பதிவு செய்தல், வடபிராந்திய போக்குவரத்து மேன்முறையீட்டு நீதி மன்றத்தை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும், கடந்த மார்ச் 21 திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி – யாழ் வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்  போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம அவர்களினால் வட பகுதிக்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்ட வேலைகளை முன்னகர்த்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறைக்கென   தனியான ஒரு  பீடம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்...
எம்மை திரும்பி பார்க்காத கட்சிகள் எமக்கு வேண்டாம்: நீங்களே தேவை - டக்ளஸ் எம்.பியிடம் பண்டிவிரிச்சா...
அராலித்துறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில...

எல்லாள மன்னனது சமாதியை மீளப் புனரமைத்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க...
தொழில்சார் தகைமையாளர்களுக்கு வேலை வாய்ப்பு - இந்தியாவின் அனுசரனையை பெற்றுக் கொள்ள அமைச்சர் டக்ளஸ் தே...
சவால்களை எதிர்கொண்டு உருவாகியுள்ள எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து உச்சபட்சமான நன்மைகளை பெற்ற வே...