வடக்கின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, September 1st, 2023

வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னுடைய முயற்சிகளுக்கு துறைசார் அமைச்சரான மருத்துவர் ரமேஸ் பத்திரன பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: