வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்தினுடன் முன்கொண்டுசெல்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Monday, August 23rd, 2021

கடற்றொழில் அமைச்சின் கீ்ழ் செயற்பட்டு வருகின்ற வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்கொண்டு செல்லுதல் மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் போன்றவை தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்னாயக்கா மற்றும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் திசைவீரசிங்கம் ஆகியோருடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts: