முல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆய்வு!

Tuesday, December 25th, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழான மன்னாகன்டன் பகுதியில் அமையப்பெற்றுள்ள மூன்று இடைத்தங்கல் முகாம்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நேரில் விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இதன்போது குறித்த இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களையும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வைத்தார்.

இதனிடையே சுதந்திரபுரம் பகுதியில் அமையப்பெற்றுள்ள இடைத்தங்கல் முகாமிற்கும் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

48385057_760985267601744_1914479876895670272_n 48392707_2584382511578568_4733406705856020480_n 48403448_2246575398957350_8973179420084797440_n 48409221_326267081550964_1742349888458326016_n 48412044_364290114355996_1523887059847086080_n 48412999_521697814981241_767464807019315200_n 48422954_414688085937197_8631052749171064832_n 48423711_594042391057196_1735911294394957824_n 48425057_275531949981069_8773132492115804160_n 49107914_1933342700083344_4294892842741923840_n

Related posts: