மக்கள் நலச் செயற்பாடுகள் மேலும் வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படும் – வேலணை பிரதேச ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, December 31st, 2022


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச ஆலோசனை சபையினர் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களுடனான கூட்டம் இன்று கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கட்சியின் வேலணை பிரதேச அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதேசத்தின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் ஆலோசனை சபை உறுப்பினர்களினாலும், பிரதேச கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் உட்பட்ட கடற்றொழிலாளர்களினதும் பிரதிநிதிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வேலணை பிரதேசத்தில் மக்கள் நலச் செயற்பாடுகளை மேலும் வீரியமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் கட்சியின் பிரதேச நிர்வாகக் கட்டமைப்பினை தெளிவுபடுத்தினார்.

அதேபோன்று, கடற்றொழிலாளர் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். – 31.12.2022

Related posts:

தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாடில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறப்பு கலந்துரையாட...
சுய பொருளாதாத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முழுமையாக அக்கறை செலுத்தி வருகின்றது - அமைச்சர் டக்ள...
வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு பொன்னான வாய்ப்பு - அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் செயற்பாடு குறித்தும் அமைச...

நியாயமான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட மாகாண சபை முறைமை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் ஆட்சியின...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் விசேட பூஜை வழிபாடு...
சுத்திகரித்த குடிநீரை சாவகச்சேரி மக்களுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!