தேசியக் கூட்டு! ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!!

Wednesday, June 15th, 2016

ஈ.பி.டி.பியின் எதிர்காலச் செயற்பாடுகள் பலதளங்களிலும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று கடந்த 8ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றகட்சியின் பொதுச் சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைவாகதேசியக் கட்சிகளுடன் கூட்டுமற்றும் பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டுஎனும் வேலைத் திட்டத்தின் பிரகாரம் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான தேசியக் கூட்டுமற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றது.

ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஏற்பாட்டில் ஜனாதிபதியின் வாசஸ்தளத்தில் அன்மையில் நடைபெற்றசந்திப்பில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பலப்படுத்தி எதிர்காலச் சவால்களை எதிர் கொள்ளும் விதமாக முன்னோக்கிச் செல்வது யுத்தப்பாதிப்புக்குள்ளான வடக்கு கிழக்கில் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி தலைமையிலான சந்திப்பின்போது அமைச்சர்களான மகிந்த அமரவீர பைசர் முஸ்தப்பா மற்றும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாதலைமையிலானகட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

 d2107166-0e5d-4f28-ba00-213fe31de082

Related posts:

முன்னாள் போராளிகளின் கடன் இரத்தாகும் : டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்...
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்...
அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் ரமேஸ் பத்திரன பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்...

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களான ரோஹித அபயகுணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்த...
முற்கொம்பன் கிராமத்தை சேர்ந்த 60 குடும்பங்களுக்கான காணி அனுமதிப் பத்திரத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் த...
ஊர்காற்றுறை, கண்ணகி அம்மன் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - பயணிகள் போக்குவரத்தி...