சுபீட்சத்தின் வீட்டை பயனாளிக்கு கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 29th, 2021

கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம் எனும் அரசாங்க திட்டத்திற்கு அமைவாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பளை நகர் பிரதேசத்தில் பயனாளர் ஒருவருக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டினை கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் ஆதரவு தாராளமாக இருந்திருக்குமாயின் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்திருந்தார்.

பளை நகரில் ‘கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம்’ எனும் அரசாங்க திட்டத்திற்கு அமைவாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பயனாளர் ஒருவருக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீட்டினை இன்று சம்பிரதாயபூர்வமாக கையளித்து உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

Related posts:

முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பபடும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை - ...
தீவக மக்களின் குடிநீரை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் தீவகத்தின் மைந்தன் என மார்தட்டுகின்றார் - ...
முல்லைத்தீவு ஐயன்குளம் மக்களுக்கு அரச வேலை வாய்ப்பு – மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் அமைச்...