கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின சிறப்பு பூஜை வழிபாடுகளில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு!

Tuesday, February 4th, 2020

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்ட்ட சிறப்பு பூஜை வழிபாடுகளில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டுள்ளார் சிறப்பித்துள்ளார்.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை கொழும்பு வெள்ளத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில்குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது சுதந்திர தின பூஜை வைபவத்தில் இலங்கை திருநாட்டின் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டது. இன்று தேசிய சுதந்திர தின வைபவங்கள் ஜனாதிபதி தலைமையில் நடைபெறுவதற்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகள் தேசிய கீதத்தை தமிழில் பாடி ஆரம்பித்ததை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராட்டியதுடன் தனது வாழ்த்துக்களையும் அவர்களுக்கு தெரிவித்தார்.

இதனிடையே இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபையினரினால் ஏற்பாடு: செய்யப்பட்டிருந்த மாணவர்களுக்கான புத்தகங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன் நூலல்களையும் வழங்கி வைத்தார்.

 .

Related posts:

பருத்தித்துறை, குருநகர், பேசாலை, பலப்பிட்டிய மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கு இந்தியாவுடன் புரிந்...
கடல் பாசி செய்கையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ள தனியார் முதலீட்டாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு பொன்னான வாய்ப்பு - அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் செயற்பாடு குறித்தும் அமைச...