கடல் அட்டை பண்ணைகளை அமைக்க தனியார் மூதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!
Saturday, February 12th, 2022
மன்னார், பள்ளிமுனையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு இனப் பெருக்க நிலையத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு மாகாணத்தில் சாத்தியமான பிரதேசங்களில் எல்லாம் பாரம்பரிய தொழில் முறைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாக வகையில் கடலட்டை பண்ணைகளை உருவாக்கி பிரதேசத்திற்கான பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக் கருவிற்கு வலுவூட்டும் வகையில் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வருகின்ற சுகந் இன்ரனேசனல் நிறுவனத்தினரால் பள்ளிமுனை கடலட்டை இனப் பெருக்க நிலையத்தினை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடலட்டைப் பண்ணை மற்றும் கடலட்டை குஞ்சு இனப் பெருக்க நிலையம் போன்றவற்றினை அமைப்பதற்கு மேலும் பல தனியார் மூதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.
சுகந் இன்ரனேசனல் நிறுவனத்தினால் மன்னார், பள்ளிமுனையில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.000
Related posts:
|
|
|


