ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயாரது புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் மரியாம்பிள்ள லூர்த்தம்மா அவர்களின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்பதாக நவாலியை சொந்த இடமாக கொண்ட அமரர் மரியாம்பிள்ள லூர்த்தம்மா வயது மூப்பின் காரணமாக தனது 89 ஆவது வயதில் கடந்த 21 ஆம் திகதி காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நவாலியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (25) அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா அமரரின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தார்.
அத்துடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர், யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் பிரதேசங்களின் நிர்வாக பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் தமது அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தனர்.
அத்துடன் அமரரின் இழப்பு தொடர்பில் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்களும் அவர்தம் குடும்பத்தினரும் தமது அனுதாபங்களை தெரிவித்திருந்தனர்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் நடைபெற்று திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதன் பின்னர் புகழுடல் நவாலி சென் பீற்றர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த இறுதி நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கட்சியின் தோழர்களும் அன்னாரது உற்றார் உறவினர் நண்பர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|