இலங்கையில் கடற்றொழில் சார் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு டுபாய் முதலீட்டாளர்கள் ஆர்வம்!

Friday, September 2nd, 2022


இலங்கையில் கடற்றொழில் சார் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கு டுபாய் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில், குறித்த முதலீட்டாளர்கள் இன்று  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, நவீன முறையிலான புதிய மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கும், ஏற்றுமதித் தரத்திலான மீன்பிடிப் படகுகளை கட்டுகின்ற தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கான விருப்பத்தினை தெரிவித்தனர்.

குறித்த விடயங்களை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னெடுக்க விரும்புகின்ற திட்டங்கள் தொடர்பான திட்ட வரைபுகளை சமர்ப்பிக்குமாறு முதலீட்டாளர்களை கோரியதுடன், நீர்வேளாண்மை விருத்தி தொடர்பாக பரந்தளவான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டுள்ளமையினால், அதுதொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். – 02.09.2022

Related posts:

தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியாது? நாடாளுமன்றில் டக்ளஸ...
பூகோள அரசியலுக்குள் ஒருபொதும் சிக்கிக் கொள்ள மாட்டேன் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட...
கடற்றொழிலாளர் விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் என்னால் கதையளக்க முடியாது - நாடாளுமன்றில் அமைச்சர் டக...

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன...
தும்பளை தாமரை மலர்கள் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினர் செந்தில் த...