வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/07/download-7-4.jpg)
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கரீபியன் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் இதன்போது கட்டடங்கள் குலுங்கியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஆறு மைல் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புவேர்ட்டோ ரிக்கோ உட்பட பல தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்ட போதும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம்!
கேந்திர நிலையமாகும் இலங்கை – ஆதரவுக் கரம் நீட்டும் ஜேர்மன் !
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
|
|