எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் : இஸ்ரேலின் 2 மாலுமிகள் பலி!

Tuesday, August 3rd, 2021

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் ஓமான் மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

குறிப்பாக உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து மர்மமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறது.

இந்த நிலையில் ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள மாசிரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டின் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts:


பாகிஸ்தான் இந்தியா மீது அணுஆயுத தாக்குதலுக்கும் தயார்  - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்!
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ இரத்தினக்கல் - கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்...
இலங்கை சுகாதாரத் துறைக்கு ஜப்பானிடமிருந்து 38 மில்லியன் டொலர்கள் மானியம் - அமைச்சர் பந்துல குணவர்தன ...