பீட்டர்சனுக்கு 2 ஆண்டுகள் போட்டித் தடை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/158911096.jpg)
ஊதியம் பெற்றுக் கொண்டு போட்டியை விட்டுக் கொடுத்தாக தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட வீரர் அல்விரோ பீட்டர்சனுக்கு 2 ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் நடைபெறும் பிராந்தியப் போட்டிகளின் போதே இவர் ஊதியம் பெற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரனைகளை தென்னாபிரிக்காவின் பிராந்திய கிரிக்கெட் கழகங்களுக்கு பொறுப்பான குழுவொன்று ஆராய்ந்துள்ளது. இதன் பிரகாரம் இவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து 2 ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டினை அல்விரோ பீட்டர்சன் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் போட்டி மழையால் இரத்து!
விளையாட்டு வீரரின் தங்கப்பதக்கத்தை பறித்த நிர்வாகம்!
கூடைப்பந்து வீரர் மறைவுக்கு விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்!
|
|