பாகிஸ்தான் அணி 143 ஓட்டங்களால் அபார வெற்றி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/04/1522637445-Pakistan-West-Indies-L.jpg)
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் கராச்சியில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான் அணி 143 ஓட்டங்களால்வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 5 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது. இந்த அணி சார்பில் ஹூசைன் தளட் 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பதிலுக்காடிய மேற்கிந்திய தீவுகள் அணி 13.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
Related posts:
ஹொட்டல் அறையில் இளம்பெண்: சிக்னார் பாகிஸ்தான் வீரர்!
இந்தியா அபார வெற்றி!
முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி!
|
|