டக்வத் லுயிஸ் முறைப்படி வெற்றி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/06/264106.jpg)
இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் செம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணியை வெற்றிக்கொண்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.பதிலளித்த பாகிஸ்தான் அணி 27 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.இதன்படி, இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதனிடையே இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது
Related posts:
இலங்கை தொடரில் இவர்களே சாதிப்பர் - முரளிதரன்!
தனுஸ்க குணதிலக்கவிற்கு தடை!
கரப்பந்தாட்ட தொடர்: வயாவிளான் மத்தி சம்பியன்!
|
|