சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/01/fed933ec-7882-4ea6-8647-9fd5792acb03-1.jpg)
பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று (18) பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
Related posts:
பதிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை விபரம்!
சர்வதேச கிரிக்கட் சபையால் அவமானப்படுத்தப்ப்ட்ட பாகிஸ்தான் அணி!
ராஜன் கதிர்காமர் சுற்றுக் கிண்ணம்: யாழ்ப்பாணக் கல்லூரி படுதோல்வி!
|
|