கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: காலிறுதிக்கு நுழைந்தது கொலம்பியா!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/06/Untitled-4-copy-3-300x193.jpg)
அமெரிக்காவில் 45ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில், ஆர்ஜன்டீனா உட்பட 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடுகின்றன.
இதில் “ஏ” பிரிவில் கொலம்பியா- பராகுவே அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 12ஆவது நிமிடத்தில் கொலம்பியா அணிக்கு கார்லோஸ் ஒரு கோல் போட்டார்
தொடர்ந்து 30ஆவது நிமிடத்தில் ரோட்ரிக்ஸ் ஒரு கோல் போட முதல் பாதியில் கொலம்பிய அணி 2–-0 என முன்னிலை பெற்றது
பின்னர் பராகுவே அணிக்கு 71ஆவது நிமிடத்தில் அயாலா ஒரு கோல் மட்டுமே போட முடிவில் கொலம்பியா 2–-1 என வெற்றி பெற்றது. இதன் மூலம் 6 புள்ளிகள் பெற்ற கொலம்பியா முதல் அணியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது.
சிகாகோவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணியை அமெரிக்கா 4–-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கொலம்பியா அணி முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.
Related posts:
|
|