இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்ஸன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!

Thursday, March 3rd, 2022

மாலைத்தீவில் கடந்த மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல்  நேற்றிரவு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது பூதவுடல் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பரிசோதனைகளின் பின்னர் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படும்.

பின்னர் எதிர்வரும் 5 ஆம் திகதி மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படும்.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் செல்லும் வழியில் பூநகரி, முழங்காவில், தேவன் பிட்டி போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக

வீரர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூதவுடல் பவனியாக எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகப்படத் தேவையில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு...
தொழில் நுட்பத்தை நாம் இயக்க வேண்டுமே தவிர எங்களை தொழில் நுட்பம் இயக்க முயன்றால் வாழ்க்கை திசைமாறிச் ...
பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குற...