5 ஆம் திகதிமுதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்!

சைட்டம் தொடர்பாக அரசு இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் இம்மாதம் 5 ஆம் திகதிமுதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் மத்தியசெயற்குழுக் கூட்டம் இன்றையதினம் கூடியிருந்த நிலையிலேயே மேற்படி முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சைட்டம் தொடர்பான பிரச்சினைதொடர்பில் அரசு உரிய நடவடிக்கையினை இதுவரையில் எடுக்காத நிலையிலேயே தாம் இவ்வாறானதொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையேஅரசுஉரியநடவடிக்கைஎடுக்காதநிலையில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடருமென்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
வடக்கின் மூன்று பெரும் வீதிகளின் திருத்தத்திற்கு நிதி கிடைத்ததும் கேள்விகள் கோரப்படும் சாலை அபிவிருத...
தயாரிக்கப்பட்ட பாடங்களை பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ள வசதி - தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர்...
இலங்கையில் தொடர்ந்தும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரப்பு!!
|
|