எரிவாயு பற்றாக்குறை நிலைமை சீராகும் – எரிவாயு நிறுவனங்கள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/10/gas-300x171.png)
சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை எதிர்வரும் சில தினங்களில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலையில், குறித்த நிறுவனங்களுக்கு சமையல் எரிவாயு கிடைத்த வண்ணம் உள்ள நிலையில், எதிர்வரும் மூன்றரை மாதங்களுக்கு அவற்றை பராமரிக்க முடியும் எனவும் குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ள போதிலும், அநேக பிரதேசங்களில் சமையல் எரிவாயு பற்றாக்குறை நிலவி வருவதால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எரிவாயு பற்றாக்குறை தற்காலிகமாக இடம்பெற்றதொன்று என சுட்டிக்காட்டிய குறித்த நிறுவனங்கள், சர்வதேச ரீதியில் எரிவாயு விநியோகம் தடைப்பட்டதை தொடர்ந்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் எரிவாயு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன
Related posts:
2020 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!
வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்வது பாதிப்பினை ஏற்படுத்தும்!
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்...
|
|