வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2024/03/download-11.jpg)
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பல்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் பலருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன.
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த “மன்னா ரமேஷ்” தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து டுபாய் அரசுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை - சீனா இடையேயான பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் மேம்பாடு!
முதலாம் தவணை ஆரம்பத்தில் பாடசாலை சீருடைத்துணி வவுச்சர்கள் – நிதி அமைச்சர்!
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி - அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு முன...
|
|