வீதி விபத்துக்களால் 13.5 லட்சம் பேர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/12/download-15.jpg)
உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் ஒவ்வோர் ஆண்டும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
5 முதல் 29 வயது வரையுடைய இளம் வயதினரின் உயிரிழப்புகளுக்கு வீதி விபத்துகள்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.
2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 13.5 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, 24 விநாடிகளுக்கு ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்.
2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 12.5 லட்சம் உயிரிழப்புகளோடு ஒப்பிடுகையில் இது 1 லட்சம் அதிகமாகும். இந்த எண்ணிக்கை, அடுத்த ஆண்டுகளில் இன்னும் மோசமான அளவில் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை வருகின்றது பாகிஸ்தானின் உயர்மட்டக் குழு !
கொரோனா பிடியில் சிக்கித் தவிக்கும் உலக நாடுகள் !
ஜனாதிபதி தலைமையில் நாளை கூடுகிறது கொரோனா ஒழிப்பு செயலணி - ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பில் தீர்க்கம...
|
|