வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரண்ணாகொட நியமனம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/12/260190743_214108304237054_695784606110350355_n.jpg)
வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை முன்னாள் தளபதி, அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதிய ஆளுநர் தமது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரித்துள்ளது.
வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்துவந்த ராஜா கொல்லுரே கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
இதனையடுத்து, ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்காக ஓய்வுபெற்ற கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புரவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உடனடி உதவிகள் வழங்கிவைப்பு!
உயர்தர வகுப்பு மாணவர்கள் கொரிய மொழியையும் தேர்வு செய்யலாம் - கொரிய தூதுவர் தெரிவிப்பு!
பதவியேற்று ஒரு வருடத்தின் பின்னர் இந்தியா - சீனாவுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க!
|
|