யாழ் மாவட்ட மக்களுக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்யமூர்த்தி விடுக்கும் அவசர கோரிக்கை!

Wednesday, April 8th, 2020

யாழ்ப்பாண மாவட்டமானது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் மக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு மிகவும் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டுமென யாழ்ப்பாண மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் பி.சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதன்படி, மக்கள் எதிர்வரும் நாட்களிலும் வீடுகளில் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே சென்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

Related posts:

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் கட்டமைப்பில் மாற்றம் – கோரிக்கை முன்வெக்கப்பட்டுள்ளத...
ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்கிறது அரசாங...
இலங்கையில் சிறுவர் குற்றவாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவிப்பு...