யாழ்ப்பாணம் கொவிட் சிகிச்சை நிலையத்தில் பாரிய மோசடி – உடனடி விசாரணைக்கு பிரதமர் பணிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/03/download-2-29.jpg)
யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
அத்துடன் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (31) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
முன்பதாக யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாயமாகியிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியது.
வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த கொரோனா இடைத்தங்கல் முகாம்கள் செயற்பட்டுவந்தன.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
திருமலையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமாயின் தலைமை மாற்றத்தை உருவாக்க வேண்டும் – ஈ....
காலநிலை மாற்றத்தினால் யாழ் மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை - அனர்த்த முகாமைத்துவப் பிர...
புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சாதனை!
|
|