மோசடிகளை தடுக்க தபாலகத்தில் ஸ்கான் இயந்திரம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/03/Untitled-2-copy-10-418x270.jpg)
தபால் மூலமாக நடைபெற்றுவரும் மோசடிகளைத் தடுப்பதற்கு ஸ்கான் இயந்திரம் தேவையென தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மைய காலத்தில் தபால் மூலம் போதைப் பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளதாகவும் இதனைத் தடுப்பதற்காகவே இந்த ஸ்கேன் இயந்திரத்தின் உதவி தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகளுககு அமைய இதற்கான விசாரணைகளை தபால் திணைக்களத்தினுள் ஆரம்பித்துள்ளதாகவும் இது போன்ற குற்றங்களையும் மோசடிகளையும் கண்டறிய ஸ்கான் இயந்திரம் தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நீடிப்பு!
பதவி விலகப்போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றும் அறிவிப்பு!
|
|