புதிய தவணைக்காக மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நந்தலால் வீரசிங்க நியமனம்!

மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுள்ளார்.
இதன்படி அடுத்த ஆறு வருடங்களுக்கு கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பார்.
மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கடிதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முதலில் அங்கீகரிக்கப்படாத போதிலும், பின்னர் அதற்கு அனுமதி வழங்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்இ
இதேவேளை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் தயா ரத்நாயக்கவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நல்லூர் விபத்தில் படுகாயமடைந்தவர் பரிதாபமாக பலி – விபத்தை ஏற்படுத்தியவர் இன்னமும் கைது செய்யப்படவில்...
பண்ணைப் பகுதி புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டது பெண் ஒருவரின் எச்சங்களா?
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவே பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...
|
|