பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/05/1588656728-Department-of-Labour-2.jpg)
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மே மாதம் 15 ஆம் திகதிவரை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை வழங்க சம்பந்தப்பட்டவர்கள் அதீத முனைப்பை காட்டி வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி தொழில் திணைக்களத்தின் இணைய முகவரியான www.labourdept.gov.lk க்குள் பிரவேசத்து இந்த செயற்பாட்டுடன் இணைந்துக்கொள்ள முடியும் என தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
செப்டெம்பர் 20 முதல் சர்வதேச புத்தக கண்காட்சி!
நீரில் மூழ்கும் யாழ்ப்பாணம் விமான நிலையம் !
கூட்டமைப்பிற்கு வாக்களித்து ஏமாந்ததை விட கிடைத்த பலன் என்ன? – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வ...
|
|