பசுபிக் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் அருகே இலங்கைக் கடற்படைக்க பயிற்சி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/04/download-3-6.jpg)
இரண்டாம் உலக யுத்தத்தில் பசுபிக் கடலில் மூழ்கிய ஜப்பானியக் கப்பல் அருகே இலங்கைக் கடற்படையின் ஒரு பிரிவினர் சுழியோடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியப் போர்க்கப்பலான டோகாய் மாரு கப்பல் அமெரிக்க தலைமையிலான நேசநாட்டுப் படையினரால் பசுபிக் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டது.குறித்த கப்பல் கடலுக்கடியில் புதைந்துள்ள பகுதியில் கண்காணிப்பு மற்றும் செயன்முறை சுழியோடும் பயிற்சியொன்றில் இலங்கைக் கடற்படைச் சிப்பாய்கள் பிரிவொன்று ஈடுபட்டுள்ளது.
ஜப்பான் குவாமி கடற்படை முகாமில் அமெரிக்க கடற்படையினருடன் இணைந்து சுழியோடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கைக் கடற்படைச்சிப்பாய்கள் பிரிவினரே இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Related posts:
கந்தரோடையில் ஆயுத முனையில் அச்சுறுத்தி பெரும் நகைக் கொள்ளை – மூவர் சந்தேகத்தில் கைது!
சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 130 டொலராக அதிகரிப்பு!
மாகாண சபை முறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாயின் தற்போதுள்ள குறைபாடுகள் சீர்செய்யப்பட வேண்டும் - சகல ...
|
|