நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு – ஒருவாரத்தில் 51 பேர் மரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

நாட்டில் கடந்த ஜூலை 24 ஆம் திகதிமுதல் 30 வரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக 51 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த காலகட்டத்தில் மொத்தம் 380 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதனால் 260 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை வீதி விபத்துக்களால் நேற்றையதினம் மாத்திரம் ஒன்பது உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இயற்கை உரத்தை பயன்படுத்தினால் 18000 ரூபா!
போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்!
கொரோனா வைரஸ் : இலங்கையை தாக்கினால் பாரிய ஆபத்து - சுகாதார சேவை இயக்குனர் நாயகம்!
|
|