தோழர் குணாளனின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/04/169496083_828836357704045_5953812268955538761_n.jpg)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் விசுவாசத்துக்குரியவருமான தோழர் குணாளனின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தலைமையிலான முக்கியஸ்தர்கள் கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்பதாக கொழும்பு அவிசாவளையை பிறப்பிடமாகவும் கரம்பன் மேற்கு ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசு சிவகுமார் என்னும் இயற்பெயருடைய தோழர் குணாளன் நேற்று(6) அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக தனது 49 ஆவது வயதில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஊர்காவற்றுறையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அங்கு சென்ற கட்சியின் தேசிய அமைப்பாளர், யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் பிரதேசங்களின் நிர்வாக பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் அமரரின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து தமது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தனர்.
அத்துடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.
அத்துடன் அமரரின் இழப்பு தொடர்பில் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்களும் அவர்தம் குடும்பத்தினரும் தமது அனுதாபங்களை தெரிவித்திருந்தனர்.
Related posts:
|
|