தொழில்நுட்ப கல்வி திறனை விருத்தி செய்ய விசேட திட்டம்!
Tuesday, July 10th, 2018ஒபெக் நிதியத்தின் உதவியின் மூலம் நாட்டின் தொழில்நுட்ப கல்வி மற்றும் திறனை விருத்தி செய்யும் விசேட திட்டமொன்று அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதற்கு 50 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைத்துள்ளது.
13 வருட கட்டாய கல்வி கொள்கையை முன்னெடுக்க கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர்கள் பயிற்சிகளும் அவசியமாகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பிரத்தியேக கல்வியை மேம்படுத்த பல தொழில்நுட்ப ஆய்வு சாலைகளை கல்வியமைச்சு நிர்மாணிக்கவுள்ளது.
அத்துடன் 60.7 மில்லியன் டொலர் செயற்றிட்டத்தின் கீழ் பிரத்தியேக கல்வி விருத்தி மற்றும் ஆசிரியர் பயிற்சி திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் 50 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்கவுள்ளது.
Related posts:
கொரோனாவை இனங்காணும் புதிய முறைமையை கண்டுபிடித்த இலங்கை பேராசிரியரின் ஆய்வுக் குழு!
எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - சிக்கனம் என்பது அரசியல்வாதிகளிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண...
நாளாந்தம் 932.4 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலுடன் கலக்கின்றது - சுற்றாடல் அமைச்சு எச்சரிக்க...
|
|