சட்ட மா அதிபர் திணைக்களத்தில் ஊழியர் பற்றாக்குறை!

சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கின்ற ஆவணங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைக்கு போதுமான ஆட்கள் திணைக்களத்தில் இல்லை என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், என்.ஆர். அபேசூரிய தெரிவித்துள்ளார்.
விஷேடமாக சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக அதிகளவான ஆவணங்கள் கிடைக்கப் பெறுவதாகவும், அவை சட்ட மா அதிபர் திணைக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் சம்பந்தமாக வடமேல் மாகாணத்தில் பொலிஸ் அதிகாரிகளை தௌிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், என்.ஆர். அபேசூரிய இதனைக் கூறியுள்ளார்.
Related posts:
பெற்றோரை மதிக்காத பிள்ளைகளுக்கு சிறை - அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க!
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயார் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 43 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் - சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...
|
|