கொரோனா பரவல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளில் தளர்வு – இன்றுமுதல் புதிய வழிகாட்டியை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Saturday, July 10th, 2021

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார அமைச்சு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறையில் நடமாட்ட கட்டுப்பாடுகள் இன்று 10 ஆம் திகதிமுதல் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தைடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

திருமண வைபவங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருமண மண்டபங்களில் 25 சதவீதம் அல்லது 150க்கும் குறைந்த அளவில் நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் விகாரைகள் போன்ற மதஸ்த்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகாத மரணங்களின் இறுதிக் கிரியைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இறுதிக் கிரியைகளின் 50 பேர் கலந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கருத்தரங்குகள், பட்டறைகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக உள்ளக ஆசன வசதிகளை கொண்ட உணவகங்கள் மற்றும் விடுதிகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றுமுதல் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து சினிமாக்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மொத்த ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானவர்களை அனுமதித்து மாத்திரமே திரையரங்குகளை திறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனாத் தொற்றுநோய் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் தாங்கள் பெரும் இழப்பை சந்திக்கிறோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: