கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைவு!

Monday, June 28th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 867 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் ஆயிரத்து 797 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 100 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 53 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 715 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 2 ஆயிரத்து 158 பேர் குணமடைந்ததாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 18 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 39 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்றுமுன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்றுமுன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில், 12 பெண்களினதும், 27 ஆண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் 30 வயதிற்கு உட்பட்ட ஆண் ஒருவரின் மரணம் பதிவாகியுள்ளதுடன் 30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 3 பெண்களும், 9 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட 9 பெண்களும், 17 ஆண்களும் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: