கட்டுநாயக்க வந்த விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டது – காரணம் என்ன?

ஓமான் – மஸ்கட் விமானநிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை பெய்த அடை மழை காரணமாக குறித்த விமானத்தை மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கக்பபடுகின்றது. அதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானம் 5.20 மணிக்கு மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அதன் பின்னர் காலை 6.30 மணிக்கு மத்தல விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் 6.47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விமானத்தில் 130 பேர் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி நிதியம் நாளை முதல் இடமாற்றம்!
அம்பாறை மாவட்டத்தில் சேதனப் பசளை உற்பத்தி பயிற்சி - கமநல சேவைகள் உதவி ஆணையாளர் சம்பா தென்னக்கோன் தெர...
இலங்கையுடன் நெருக்கமாகும் ஐரோப்பா - இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை!
|
|