ஒரு இலட்சம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021

க.பொ.த சாதாரணதரத்தைப் பூர்த்தி செய்த ஒரு இலட்சம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை சமுர்த்தி, நுண் நிதி, சுயதொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

2015 – 2019 காலப்பகுதியில் அரச சேவைக்கு வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 22,145 ஆகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு மாத்திரம் 60,000 பட்டதாரி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், க.பொ.த சாதாரண தரம் வரை படித்த அல்லது க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத 100,000 இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..   

000

Related posts:

சம்பூர் மக்களின் உணர்வுகள் மதிப்பளிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா
அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு - நுகர்வோர் அத...
ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள உத்தேச சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிப...