எவன்ட் கார்ட் மூலம் கடற்படைக்கு 233 கோடி வருமானம்!

எவன்ட் கார்ட் கடல்சார் பாதுகாப்பு சேவை தமது நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்னர் 233 கோடி ரூபா வருமானம் பெறப்பட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
எவன்ட் கார்ட் கடல்சார் பாதுகாப்பு சேவை கடந்த வருடம் நவம்பர் மாதம் 13ஆம் திகதி கடற்படை நிருவாகத்தின் கீழ் கொணடுவரப்பட்ட பின்னர் ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. இக்காலப் பகுதியில் இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் காலியில் அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு அலுவலகங்களுக்கிடையில் 6646 கப்பல்களுக்கான பயண சேவைகளுக்கு கடற்படை உதவியுள்ளது. மாதமொன்றுக்கு சராசரியாக 554 பயணங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட வருமானத்தை அரசாங்கத்தின் ஒன்றிணைந்த நிதியத்துக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொள்ளவுள்ளனர்
Related posts:
யாழ்ப்பாண மாவட்டத்தில் கருவாடு உற்பத்தி அதிகரிப்பு!
சோதனை வெற்றி: கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி அறிவிப்பு!
யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி - முன்பதிவை மேற்கொள்ள மாவட்ட செயலர் அழைப்பு!
|
|